Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கர்நாடகத்தில் முதன்முறையாக 2 குழந்தைகளுக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு!

14 வயது சிறுவன், 11 வயது சிறுமி என இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கறுப்புப் பூஞ்சை தொற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு கறுப்புப் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. 14 வயது சிறுவன், 11 வயது சிறுமி என இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கறுப்புப் பூஞ்சை தொற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும், பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கும் கறுப்புப் பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பண்ணையில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த இவர்களுக்கு கறுப்புப் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு குழந்தைகளும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் கடுமையான சிறார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெளிவந்த அறிக்கையில், இருவரும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் தங்கள் கண்களில், குறைந்தது ஒன்றை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் கறுப்புப் பூஞ்சை தொற்று அவர்களின் மூளை மற்றும் கண்களுக்கு பரவியுள்ளது என்று அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாரி நகரில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, போரிங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக அவள் கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து துமகுருவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கறுப்புப் பூஞ்சை இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிதத்தை தொடர்ந்து சிறுவன் போரிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் குழந்தைகளுக்கு மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்படுவது இது முதல் முறை. இதுவரை கர்நாடகாவில் 1,250 மியூகோர்மைகோசிஸ் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 18 பேர் குணமடைந்த நிலையில்கூட 39 நோயாளிகள் பூஞ்சை நோயால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மொத்தம் 1,193 நோயாளிகள் தற்போது கர்நாடகாவில் மியூகோர்மைக்கோசிஸ் சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகர மாவட்டத்தில் மட்டும் 521 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கறுப்புப் பூஞ்சை நோயை தவிர்க்க, கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் முதல் வாரத்தில், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் மத்திய அரசிடமிருந்து பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை சுமார் 10,000 குப்பிகள் வரை கர்நாடகா பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதானந்த கவுடாவுடன் மியூகோர்மைகோசிஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளுக்காக எட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment