கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்க எக்கச்சக்கமான மக்கள் குவிந்தனர்.
புதன்கிழமை நிலவரப்படி, பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசிக்காக ஆல்பர்ட்டாவில் முன்பதிவு செய்தாயிற்று. தற்போது அங்கு 6,305 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
ஜூன் 1 நிலவரப்படி 435 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 122 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்கள். ஆல்பர்ட்டா சுகாதாரத்துறைக்கான செய்தித்தொடர்பாளர் ஒருவர், செவ்வாயன்று மட்டுமே 120,000 பேர் தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஏப்ரலில் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள், ஜூன் 12 முதல் தங்கள் இரண்டாவது டோஸுக்காக முன்பதிவு செய்யலாம். மே மாதம் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள், ஜூன் 28 முதல் தங்கள் இரண்டாவது டோஸுக்காக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.