Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடா அரசு அதிரடி நடவடிக்கை ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் பயணிகள்…

கனடாவுக்கு வரும் பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை நாளை முதல் எக்கச்சக்கமாக அதிகரிக்க உள்ளது.

கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் பயணிகள் கொரோனா சோதனைக்கு உட்பட மறுத்தாலோ, ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுத்தாலோ, அவர்களுக்கு தற்போது 3,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை முதல் அந்த அபராதத்தொகை 2,000 டொலர்கள் உயர்ந்து, 5,000 டொலர்களாக ஆக்கப்பட இருக்கிறது.

கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் அனைத்துப் பயணிகளும் கனடாவுக்குள் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றும், 14 நாட்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய நிலையில், கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வரும் வரையில் அரசு நியமித்துள்ள ஹொட்டல் ஒன்றில் மூன்று நாட்களுக்கு அவர்கள் தங்கவேண்டும் என்றும், அதற்கான கட்டணமான 2,000 டொலர்களை தாங்களே செலுத்தவேண்டும் என்றும் பிப்ரவரி 22ஆம் திகதி கனடா அரசு அறிவித்தது.

அத்துடன், கனடாவுக்கு வருவதற்கு முன்பும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

ஆனால், பல பயணிகள், 3,000 டொலர்கள் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு ஹொட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்தாமலே சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே, இந்த ஹொட்டல் தனிமைப்படுத்தலே தேவையில்லை என்றும், மக்களே தங்கள் தனிமைப்படுத்துதலை ஏற்பாடு செய்துகொள்ளட்டும் என்றும் அரசின் ஆலோசனைக் குழு பிரச்சினை எழுப்பியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

ஏப்ரல் 14க்கும் மே 24க்கும் இடையில் மட்டும், 1,000க்கும் அதிகமான பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுத்ததால் அபராதம் செலுத்தியுள்ளார்கள். 400க்கும் அதிகமான பயணிகள் கனடாவுக்கு வருவதற்கு முன்னும், விமான நிலையம் வந்த உடனும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாததற்காக அபராதம் செலுத்தியுள்ளார்கள் என கனடா அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment