Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கொழும்புக்குள் வந்த 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள்-மூன்று மணித்தியாலத்தில்

மூன்று மணித்தியாலத்தில் கொழும்புக்குள் 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை பகுதியிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கமைய 147 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குளியாபிட்டி பகுதியில் 100 பேரும், கண்டி பகுதியில் 85 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 21775 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் 3,969 வாகனங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் பயணித்த 4,191 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிக்கு புறம்பாக பயணிக்க முற்பட்ட 154 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் பயணித்த 275 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்புக்கமைய நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களே அதிகளவில் வந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய 16 ஆயிரத்து 571 வாகனங்கள் இவ்வாறு வருகைத்தந்துள்ளன. இதன்போது ஹைலெவல் வீதி மற்றும் கண்டி வீதி ஊடாகவே கொழும்புக்குள் பெருந்தொகையான வாகனங்கள் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் , 8,412 வாகனங்களில் சுகாதார பிரிவினரும், 9498 வாகனங்களில் அரச உத்தியோகத்தர்களும் வருகை தந்துள்ளதுடன், 3968 வாகனங்களில் நோயாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதற்கமைய 3 மணிநேரத்திற்குள் 62235 வாகனங்கள் கொழும்புக்குள் வருகை தந்துள்ளன.

கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்களை கணக்கீடு செய்வது மட்டுமன்றி, அந்த வாகனங்களில் வருகை தருபவர்கள் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனரா?, அவர்கள் அத்தியாவசிய சேவை பணியாளர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றிவளைப்புக்காக ஆறு பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , இதன்போது பொலிஸார் எரிய பின்தொடர்ந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்போது தொழிலுக்கு செல்பவர்கள் தங்களது நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை பொலிஸாருக்கு காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment