Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

வாழ்க்கை கதை புத்தகமாக வெளிவரவுள்ளது- இளவரசர் ஹரியின்

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை கதையை ரகசியமாக புத்தகம் எழுதிய நிலையில், அதனை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை எதிர்த்து ஏதாவது ஒன்றை செய்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன் வாழ்க்கையில் நடந்தவற்றை புத்தகமாக எழுதியுள்ளதுடன் அதனை வரும் 2022 ஆம் வருட கடைசியில் வெளியிடவுள்ளதாகவும் ஒரு விநியோகஸ்தரிடம் நல்ல விலைக்கு அதனை விற்பனையும் செய்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர், தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதி வெளியிடுவது இது தான் முதல் தடவை. புத்தகத்தை வெளியிடும் நிறுவனமான Penguin Random House, இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இளவரசர் ஹாரி முதல் தடவையாக தன் அனுபவங்கள், இழப்புகள் என்று தன் வாழ்க்கை முழுவதையும் சுயசரிதை எழுதியிருக்கிறார் என கூறியுள்ளது.

மேலும் தற்போது அரச குடும்பத்துடன் தனக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் ஹாரி ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு ஒரு புத்தகத்தை அவர் வெளியிடுகிறார்.

இவ்வாறான நிலையில் அப்போது எப்படி உறவுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை சரி செய்வார்? என்று அரசு குடும்பத்தின் நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment