2022ஆம் வருடமானது ரிஷப ராசி அன்பர்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு பிறக்கும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் குறையும். செயல்களின் தன்மைகளும், புரிதலும் மேம்படும். பொருட்சேர்க்கை வசதிகள் மேம்படும். மனதளவில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பொருளாதாரம் :
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனை சார்ந்த விஷயங்களின் மூலம் லாபங்கள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வீட்டினை ரசனைக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைப்பீர்கள்.
பெண்களுக்கு :
தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகளும், முயற்சிகளும் மேம்படும். உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. பங்குச்சந்தை தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபார ஸ்தலங்களை மாற்றியமைப்பதற்கான சூழ்நிலைகள் சிலருக்கு உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். வித்தியாசமான சில முயற்சிகளின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் உதவியின் மூலம் முன்னேற்றத்திற்கான வியூகங்களை உருவாக்குவீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
நன்மைகள் :
மனதளவில் புதுமையான சிந்தனைகளும், அதற்குண்டான ஆதரவுகளும், செல்வச்சேர்க்கையும், நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் ஒரு ஆண்டாக அமையும்.
கவனம் :
பத்திரம் தொடர்பான விஷயங்களிலும், மற்றவர்களுக்கு உதவும் பொழுதும், எதிர்காலம் சார்ந்த முதலீடுகளிலும் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
வழிபாடு :
திங்கட்கிழமைத்தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வராஹி அம்மனை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி ஒத்துழைப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.