மகசீன் சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் ஒரு வருடத்திற்கு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இன்று(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போதே ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும், 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், வெளிநாடு செல்வதற்கும், நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் மகசீன் சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.