பிப்ரவரி 10 1969ஆம் ஆண்டு இதே நாளில் தான் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார்.

1967ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், அவரது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மு. கருணாநிதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்வுப்படி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அறிஞர் அண்ணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த அதே தமிழக ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் மு.கருணாநிதிக்கும் மற்றும் அவரது இதர அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.