தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் அகப்பட்டு இரண்டு கைகளும் சிதைவடைந்த நிலையில் குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்திய சாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான இவர்இ தும்பு அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் தும்படிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதுஇ குறித்த இயந்திரத்துக்குள் இரண்டு கைகளும் சிக்குண்டு சிதைவடைந்தன.
பெண் படுகாயமடைந்து சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேலாகியதால் அவரது கைகளை பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்துவதில் மருத்துவ நிபுணர்களுக்கு சவாலாகியது. எனினும் சத்திர சிகிச்சையை முன்னெடுக்க மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்களான கே.இளஞ்செழியபல்லவன், எஸ்.செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினரின் 7 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் இடது கை காப்பாற்றப்பட்டது. எனினும் பெண்ணின் வலது கை முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரான கே.இளஞ்செழிய பல்லவன்இ கண்டி பேராதனை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்பெற்றுள்ளார். இவர் இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை மக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.