
ஈராக் தலைநகர் பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உருளைகள் வெடித்ததில் பலர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்தாதில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை இரவு இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் உருளைகள் வெடித்ததால் அந்த மருத்துவமனை தீப்பிடித்து எரிந்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் ஈராக் அதிகாரிகள் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிடப்படவில்லை.
மருத்துவமனைக்குள் குறைந்தது ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக் நாடு கடுமையான கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் உள்ளது. தினசரி இப்போது சராசரியாக 8,000 பேர்களுக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இது கடந்த ஆண்டு நாட்டில் தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து மிக அதிகமாகும். தடுப்பூசி போடுமாறு அரசாங்கம் தொடர்ந்து பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது,
ஆனால் சுகாதார அமைப்பு மற்றும் குறிப்பாக தடுப்பூசிகளின் பரவலான அவநம்பிக்கை காரணமாக மக்கள் கண்டுகொள்வதில்லை என்றே தெரிய வந்துள்ளது.