மாரி 2 படத்திற்கு பிறகு தனுஷ் நடித்துள்ள, எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸாக உள்ளது. இதையடுத்து வெற்றிமாறனின் அசுரன், சத்யஜோதி பிலிம்ஸின் இரண்டு படங்கள் உட்பட நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
இவற்றில் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் முதல்படத்தின், படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(மார்ச் 6) துவங்கியது. தனுஷின் 39வது படமாக உருவாகும் இப்படத்தில் சினேகாவும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். விவேக் மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள்.