ஆன்மீகம் இந்து சமயம்

நாளை சிறப்புமிகு ஆனி உத்திரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் மிகவும் அற்புதமான திருமேனி நடராஜர் திருவுருவம். நடராஜ பெருமானின் திருவுருவில் பஞ்சபூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள், அனைத்து தெய்வ தத்துவங்களும் அடக்கம்.

இவரது உடல் வெம்மையானது. கழுத்தில் நீல கண்டம், கையில் அக்னிச்சுடர், உடலில் சுடுகாட்டு சாம்பல் பூசப்பட்டு உஷ்ணமான திருமேனியாக இருப்பதால், சிவபெருமானை குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. அதாவது ஆடலரசரான நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படும்.

இறைவனை குளிர்விப்பதால் இயற்கையும் குளிர்கிறது என்பது ஐதீகம். இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

ஏன் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது?

வைகாசி மாதத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் ஆனி மாதத்தில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், நடராஜ பெருமானை வெப்ப தாக்கத்திலிருந்து குளிர்விப்பதற்காக பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களை கொண்டு ஆனி மாதத்தில் திருமஞ்சனம் செய்கின்றனர்.

ஆனி உத்திரம் :

உலகெங்கிலும் வாழும் பெருமக்களுக்கெல்லாம் பரம்பொருளாக இருந்து இந்த உலகையும், மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம், ஆனி திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.

ஆனி மாதம் என்றாலே ஆனி உத்திர விரதம் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனி உத்திரம் தரிசனத்தன்று அம்பலத்தாடும் நடராஜருக்கு அதிகாலை நேரத்தில் ஆனந்த திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் சர்வ லோக நாயகராக சித்சபைக்கு நடராஜர் ஆனந்த தாண்டவமாடியபடி தரிசனம் தரும் நாள் ஆனி உத்திரம் ஆகும்.

பலன்கள் :

🌻 ஆனி திருமஞ்சன நாளில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை பெண்கள் தரிசித்தால் சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள்.

🌻 கன்னியர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும்.

🌻 ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல்பலமும் கூடும்.

🌻 கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

Recent posts

சிலுவைகளைச் சுமக்கும்போது நீர் என்னோடு இருப்பீராக.

சிலுவைப்பாதை – 14 நிலைகள்** (Siluvaippadhai – 14 Nilaigal) அறிமுகம் சிலுவைப்பாதை என்பது இயேசு கிறிஸ்து தனது சிலுவையைச் சுமந்து, கொல்கொதா மலைக்குச் சென்ற பாதையில்...
Thamil Paarvai

ரோமன் கத்தோலிக்க பாஸ்கா திருவிழிப்பு

கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஆண்டில் மிக உயர்ந்ததும், மிக முக்கியமானதுமான கொண்டாட்டம் பாஸ்கா திருவிழிப்பு (Easter Vigil) ஆகும். இது இயேசு கிறிஸ்து சாவிலிருந்து உயிர்த்தெழுந்த நிகழ்வை மையமாகக்...
Thamil Paarvai

புதிய வழியில் அழைக்கிறார்.

தவக்காலம்: நாள் 1 (சாம்பல் புதன்) – கதை “சாம்பலும், புதிய தொடக்கமும்” பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறிய கிராமத்தில் அந்தோணி என்ற பெயரில் ஒரு...
Thamil Paarvai

🌿 ஒரு புதிய ஆன்மீக பயணத்திற்கான தொடக்கம் 🌿

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்கு தியாகம், கருணை, மன்னிப்பு, மற்றும் புதிய தொடக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. விபுதி புதன் (Ash Wednesday) என்பது அந்த ஆன்மீகப் பயணத்தின் முதல்...
Thamil Paarvai

செல்வங்கள் பெருக… 

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்ட ஒன்று பணம். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம்...
Thamil Paarvai

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?…

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது...
Thamil Paarvai

சபரிமலைஐயப்பன் கோவிலின் ஆன்மிக வழிபாட்டு முறைகள் .

🛕 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோவிலில் பல விதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. 🕉️ முக்கிய பூஜைகள்: 🌅உஷத் கால...
Thamil Paarvai

ஐயப்பன் கோவிலில் தேங்காய் வழிபாடு எதற்காக?

🙏 ஐயப்பன் கோவிலில் இந்த சன்னதியில் தேங்காயை உடைக்கக்கூடாது..! 🙏 🛕 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது,...
Thamil Paarvai

அமைச்சர் அடுத்து என்ன செய்வது? ஐயப்பன் வரலாறு

👨‍⚖️ அமைச்சர் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த கணத்தில் அவர் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு சம்பவம் அவருக்கு சாதகமாக அமைந்தது. 🗣️ அதாவது மணிகண்டன் தனது...
Thamil Paarvai

Leave a Comment