பிரித்தானியாவில் இந்த மாதம் 21ம் திகதியோடு 95% சத விகிதமான கட்டுப்பாடுகளை தளர்த்தி, கொரோனாவில் இருந்து விடுபட்ட சுதந்திர நாடாக அறிவிக்க இருந்த நிலையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்(Boris Johnson) தளர்வுகளை பிற்போட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் திடீரென இந்திய கொரோனா தொற்ற ஆரம்பித்ததால், அது பிரித்தானியாவில் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் நேற்றைய தினம்(14) மாலை தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய பொறிஸ் ஜோன்சன்((Boris Johnson)) நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தலை விடுத்தார்.
இதன்போது அடுத்த மாதம் 19 வரை லாக் டவுன் தளர்வுகளை தாம் பிற்போட்டுள்ளதாக பிரதமர் (Boris Johnson)தெரிவித்துள்ளார்.
இதேவேளை உத்தியோக பற்றற்ற ரீதியில் வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் வரை லாக் டவுன் கட்டுப்பாடுகள் இருக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.