Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மகன் ஆர்ச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசிய மேகன் மெர்க்கல்: அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்.

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னர் மகன் ஆர்ச்சியுடன் இணைந்து மேகன் மெர்க்கல் ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா திரும்பியிருந்த கணவர் ஹரியிடமும் மேகன் மெர்க்கல் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

இளவரசர் ஹரியை பொருத்தமட்டில், பிரித்தானியாவுக்கான பயணம் என்பது தற்போதைய சூழலில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என அறிந்து கொண்ட நிலையிலேயே, மேகன் மெர்க்கல் தொடர்ந்து ஹரியை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

9 நாட்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்த ஹரி, நேற்று லண்டனில் இருந்து கலிபோர்னியா திரும்பியுள்ளார். இந்த 9 நாட்களில் ஒரே ஒருமுறை மட்டுமே, தந்தை சார்லசுடனும் சகோதரர் வில்லியமுடனும் தனிப்பட்டமுறையில் ஹரி பேசியுள்ளார்.

அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே அமைந்தது என்றே அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனாலையே, பேசித்தீர்க்க வேண்டியவை, துவக்க கட்டத்திலேயே நீடிப்பதாக அரண்மனை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

WINDSOR, ENGLAND – APRIL 17: Princess Anne, Princess Royal, Prince Charles, Prince of Wales, Prince Andrew, Duke of York, Prince Edward, Earl of Wessex, Prince William, Duke of Cambridge, Peter Phillips, Prince Harry, Duke of Sussex, Earl of Snowdon David Armstrong-Jones and Vice-Admiral Sir Timothy Laurence follow Prince Philip, Duke of Edinburgh’s coffin during the Ceremonial Procession during the funeral of Prince Philip, Duke of Edinburgh at Windsor Castle on April 17, 2021 in Windsor, England. Prince Philip of Greece and Denmark was born 10 June 1921, in Greece. He served in the British Royal Navy and fought in WWII. He married the then Princess Elizabeth on 20 November 1947 and was created Duke of Edinburgh, Earl of Merioneth, and Baron Greenwich by King VI. He served as Prince Consort to Queen Elizabeth II until his death on April 9 2021, months short of his 100th birthday. His funeral takes place today at Windsor Castle with only 30 guests invited due to Coronavirus pandemic restrictions. (Photo by Justin Tallis/WPA Pool/Getty Images)

இளவரசர் ஹரி பிரித்தானியாவில் தங்கியிருந்த 9 நாட்களும், நிறைமாத கர்ப்பிணியான மேகன் மெர்க்கல் தமது கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

தமது மகன் ஆர்ச்சி மற்றும் மேகனை இந்த நிலையில் தனியாக விட்டுவர ஹரி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனாலையே, தாங்கள் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக, மேகன் தினசரி தமது கணவருக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஹரி- மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியிருக்க தொடங்கிய நாள் முதலே, ராணியாரும் இளவரசர் பிலிப்பும் அடிக்கடி நேரலையில் பேசிக்கொள்வதாக இளவரசர் ஹரியே முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

அரண்மனைக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவர் தெரிவிக்கையில், கடந்த ஓராண்டு காலம் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு கடினமான ஒன்று எனவும்,

அதன் தொடர்ச்சியாக தமது 99ம் வயதில் ஏப்ரல் 9ம் திகதி இளவரசர் பிலிப் காலமானார் எனவும், இதனால் மனக்கசப்பில் இருக்கும் சொந்தங்கள் ஒன்றாக சேர வாய்ப்பு அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்கா திரும்பியுள்ள ஹரி 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளார். 

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment