Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மகாராஷ்டிரா: சரத்பவாரை சந்தித்த பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் – மீண்டும் ஆபரேசன் தாமரையா?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து பட்னாவிஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் இரு வேறு கொள்கையுடைய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எப்போதுமே சிவசேனா பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே மோதல் போக்கு நிலவியது. அதில் இடையில் புகுந்த சரத்பவார் உத்தவ் தாக்கரேவை, தங்கள் பக்கம் இழுத்து அவரை முதல்வராக்க ஆதரவுக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளார். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இது கொள்கையற்ற கூட்டணியாகவே கருதப்படுகிறது. இந்த கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க ஆபரேசன் தாமரை என்ற பெயரில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு மண்ணைக் கவ்வியது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சரத்பவாரை தங்களது பக்கம் இழுத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்க பா.ஜ.க இதற்கு முன்பு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. தற்போது மீண்டும் சந்தித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு பட்னாவிஸ் விளக்கம் அளித்திருக்கிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கொடுத்துள்ள விளக்கத்தில், சரத்பவாருக்கு சமீபத்தில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதனால் அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன், என்று குறிப்பிட்டு இருவரும் சந்தித்த படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் கூறுகையில், `சரத்பவார் எப்படி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் என்பது குறித்து, தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்’ என்று தெரிவித்தார். மேலும்,` இந்த சந்திப்பில் எந்த வித அரசியலும் இல்லை. ஆபரேசன் தாமரையை மறந்துவிடுங்கள். அது இங்கேயோ அல்லது மேற்கு வங்கத்திலோ எடுபடாது. அப்படி இருக்கும் போது ஏன் ஒவ்வொரு சந்திப்பையும் அரசியலாக்குகிறீர்கள்’ என்றும் அவர் தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளதையும் சஞ்சய் ராவுத் சுட்டிக்காட்டினார்.

மகாராஷ்டிரா அரசு மராத்தா இன மக்களுக்கு 13 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றி இருந்தது. ஆனால் அதனை சட்டவிரோதம் என்று கூறி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துவிட்டது. அதனால் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

அதேசமயம் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையை மகாராஷ்டிரா அரசு சரியாக கையாளவில்லை என்று கூறி பா.ஜ.க வரும் 5-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்தும் சரத்பவாருடன் பட்னாவிஸ் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

Recent posts

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. இரா. சம்பந்தன்...
Thamil Paarvai

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

Leave a Comment