இந்தியாவில் சுமார் 5.7 கோடி பேர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் எத்தனை பேர் மதுப்பழக்கத்திற்குஅடிமையாகியுள்ளனர் என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு ஆய்வை நடத்தியது. 186 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த ஆய்வில் 2,00,111 வீட்டிற்கு நேரடியாக சென்று மொத்தம் 16 கோடி பேரிடம் கருத்து கேட்டது. ஆய்வின் முடிவில் இந்தியாவில் 5.7 கோடி பேர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் முக்கியமாக சத்தீஸ்கர், கோவா, திரிபுரா, பஞ்சாப் மற்றும் அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக மக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 16 வருடங்களில் இந்தியர்களிடையே மது பழக்கம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். இந்த முடிவினை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு மதுப்பிரியர்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.