பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சின் செயலாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இளைப்பாறிய மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அமைச்சு கடந்த நவம்பர் 22 ஆம் திகதி புதிதாக உருவாக்கப்பட்டது.
அந்த துறையின் அமைச்சராக ரியல் அட்மிரல் ஜெனரல் சரத் வீரசேகர கடந்த நவம்பர் 26ம் திகதி பதவியேற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த அமைச்சையடுத்து நடப்பு அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருக்கிறது.
முன்னதாக பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர்களாக ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.