ஆன்மீகம் இந்து சமயம்

மார்கழியின் முக்கியத்துவம் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!

தமிழ் மாதங்களில் ஒன்று மார்கழி மாதம் ஆகும். மார்கழி மாதம் என்றாலே அதை பக்தியின் மாதம் மற்றும் இசையின் மாதம் என்று அழைக்கலாம். இந்த வருடம் டிசம்பர் 16, 2020 புதன்கிழமை அன்று மார்கழி மாதம் தொடங்கி ஜனவரி மாதம் 14, 2021 வியாழக்கிழமை அன்று முடிவடைகிறது.

பகவத் கீதையில் மார்கழி மாதத்தின் முக்கியத்துவத்தை பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். அதாவது மாசனம் மார்கஷீர்ஷோகம் என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். அதற்கு 12 மாதங்களில் நான் தான் மார்கழி என்று பொருள். அதாவது தன்னையே மார்கழி மாதம் என்று பகவான் கிருஷ்ணர் குறிப்பிடுகின்றார். இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற ஆன்மீகப் பாடல்கள் பாடப்படும் மற்றும் இசை உற்சவங்கள் நடைபெறும்.

தமிழ் நாட்காட்டியில் மார்கழியின் முக்கியத்துவம்

மார்கழி மாதம் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதற்காகவே என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் நடைபெறுவதில்லை. மேலும் இந்த மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலம் என்று கருதப்படுவதால், மக்கள் இந்த மாதத்தில் எந்த ஒரு சுபகாரியத்தையும் செய்வதில்லை. மாறாக இறைவனை வழிபடும் ஆன்மீகக் காரியங்களில் மட்டுமே ஈடுபடுவர்.

ஆன்மீக காரியங்களுக்கு முக்கியத்தும் தரும் மார்கழி

மார்கழி மாதம் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற ஒரு சிறந்த மாதம் ஆகும். ஏனெனில் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் “12 மாதங்களில் நானே மார்கழி” என்று தன்னையே மார்கழி மாதம் என்று கூறுகிறார். அதன் அடிப்படையில் மார்கழி மாதத்தில் மக்கள் ஆன்மீக காரியங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

ஆண்டாளின் திருப்பாவை

ஆண்டாள் அவர்களின் திருப்பாவையை பாடுவது மார்கழி மாதத்தின் ஒரு முக்கியமான சிறப்பு அம்சமாகும். திருப்பாவை 30 வசனங்களைக் கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 1 வசனம் வீதம் மார்கழி மாதத்தின் 30 நாட்களும் திருப்பாவையை மக்கள் பாடி வருகின்றனர். திருப்பதியில் காலையில் வழக்கமாக சொல்லப்படும் மந்திரங்களுக்குப் பதிலாக மார்கழி மாதம் முழுவதும் காலையில் திருப்பாவை சொல்லப்படுகிறது.

மார்கழி கோலம்

மார்கழி மாதத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் வீட்டு முற்றங்களில் கோலம் (ரங்கோலி) போடுவதாகும். குறிப்பாக மார்கழி மாதத்தில் தமிழகத்தின் தெருக்களில் உள்ள வீடுகளின் முற்றங்களில் பல வண்ணங்களில் அழகான பெரிய பெரிய கோலங்களைப் பார்க்கலாம்.

சிவன், விஷ்ணு மற்றும் அனுமனுக்கான திருவிழாக்கள் நடைபெறும் மாதம் மார்கழி

மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதேசி, அனுமன் ஜெயந்தி மற்றும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய மூன்று முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த மாதத்தில் தான் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதைத் தவிர்த்து திருவாய்மொழியில் உள்ள பாடல்கள் பகல் பத்து இராப்பத்து என்று பிரித்துப் பாடப்படுகின்றன. திருவாய்மொழி 4000 வசனங்களைக் கொண்டிருக்கிறது. இந்த பாடல்கள் பகவான் நாராயணனைப் போற்றி புகழ்ந்து பாடுகின்றன.

திருவாய்மொழியில் உள்ள முதல் 1000 வசனங்கள் வைகுண்ட ஏகாதேசிக்கு முந்தைய 10 நாட்கள் பாடப்படும். இந்த 10 நாட்கள் பகல் பத்து என்று அழைக்கப்படுகின்றன. வைகுண்ட ஏகாதேசியைத் தொடர்ந்து வரும் 10 நாட்களில் எஞ்சியிருக்கும் 3000 வசனங்கள் பாடப்படும். இந்த காலத்தை இராப்பத்து அல்லது இருப்பத்து என்று அழைப்பர்.

மார்கழியின் மற்றொரு சிறப்பு

மார்கழி மாதத்தின் இன்னுமொரு முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்களான ஐயப்ப சுவாமிகள் விரதம் இருந்து இறைவன் ஐயப்பனைத் தரிசிக்க பாதயாத்திரை மேற்கொள்வர்.

மார்கழி மாதம் குளிர்காலத்தில் வரும். அதனால் இந்த மாதத்தின் பகல் நேரங்கள் குறைவாகவும் இரவு நேரங்கள் நீண்டதாகவும் இருக்கும்.

மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலமாகக் கருதப்படுகிறது. தேவர்களின் பகல் நேரமான உத்தரயன புன்யகலம் ஜனவரி மாதத்தின் நடுவில் தொடங்குகிறது. நம்முடைய ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் போன்றதாகும். தேவர்களின் இரவு நேரம் தக்ஷினாயன புன்யகலத்தின் போது தொடங்குகிறது.

மார்கழி மாதத்தில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய நாட்கள் மற்றும் விழாக்கள்:

* வைகுண்ட ஏகாதசி – டிசம்பர் 25, 2020

* ஆரூத்ரா தரிசனம் – டிசம்பர் 30, 2020

* அனுமன் ஜெயந்தி – ஜனவரி 12, 2021

* போகி பொங்கல் – ஜனவரி 13, 2021

* பௌர்ணமி – டிசம்பர் 29, 2020

* அமாவாசை – ஜனவரி – 12, 2021

* சஷ்டி – டிசம்பர் 20, 2020

மார்கழி மாத சிறப்பு உணவுகள்:

மார்கழி மாதம் மக்கள் சில பிரபலமான பாரம்பரிய உணவுகளை சமைத்து உண்பர். அவற்றில் முக்கியமானவை அம்மினி கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, கார அப்பம், மோர் களி, அடை அவியல் மற்றும் வெல்லம் மற்றும் இனிப்புப் போலி ஆகும்.

மார்கழி மாத இசை மற்றும் நடன விழாக்கள்:

மார்கழி மாதம் என்றாலே சென்னையில் நடைபெறும் இந்திய பாரம்பரிய கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் தான் நமது ஞாபகத்திற்கு வரும். பெரும்பாலானோர் இந்த மாதம் முழுவதையும் இசை மற்றும் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதற்காகப் பயன்படுத்துவர்.

மார்கழி உற்சவம் என்று அழைக்கப்படும் இந்த இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மார்கழி மாதத்தின் போது சென்னையில் மட்டும் 3500 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகளாகும்.

Recent posts

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

விண்ணகத்தின் அப்பம், மண்ணகத்தின் இரட்சிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசத்தின் மையத்திலும், உச்சத்திலும் இருப்பது நற்கருணை (The Holy Eucharist) ஆகும். இது வெறும் அடையாளமல்ல; இது ஒரு நபர். இது வெறும் அப்பமல்ல;...
Thamil Paarvai

இறைவனின் கடிதம், மனிதனின் வரலாறு

ஒரு தந்தை தனது மகனுக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் தனது அன்பை, தனது அறிவுரைகளை, தனது வாக்குறுதிகளைப் பகிர்ந்து கொள்கிறார். அந்தக் கடிதம் மகனுக்கு வழிகாட்டியாக,...
Thamil Paarvai

புதிய மோசேயின் பிரகடனம்

புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகம் மத்தேயு நற்செய்தி ஆகும். திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்தே, இந்த நற்செய்தி மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்கும்...
Thamil Paarvai

பூமியில் வாழும் விண்ணின் அரசியலமைப்பு

உலக வரலாற்றில், ஒரு மனிதரின் சொற்கள் இவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அரிஸ்டாட்டிலின் பகுத்தறிவு, சாக்ரடீஸின் விசாரணை, கன்பூசியஸின் ஒழுக்கம், புத்தரின் இரக்கம் – இவை அனைத்தும்...
Thamil Paarvai

Leave a Comment