பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்களை மிராஜ் போர் விமானங்கள் அழித்தன. இதன் நினைவாக, தனது குழந்தைக்கு ‘மிராஜ்’ என்று பெயர் வைத்த ராஜஸ்தான் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள தபார் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் மஹாவீர். கர்ப்பிணியான இவரது மனைவிக்கு கடந்த 26ம் தேதி அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுஇ அன்றைய தினம் அதிகாலை 3. 50 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஆசிரியர் மஹாவீர் தனது குழந்தைக்கு மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிட்டுள்ளார்.
கடந்த 26ம் தேதி மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் தீவிரவாத முகாம்களை அழிக்கும் நேரத்தில் குழந்தை பிறந்ததால், இந்த பெயர் வைக்கப்பட்டதாக மஹாவீர் தெரிவித்தார். குழந்தையின் இரு மாமாக்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களின் அறிவுறுத்தல் பெயரில், குழந்தைக்கு ‘மிராஜ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக மஹாவீர் தெரிவித்தார்.
ஆசிரியர் தன்னுடைய குழந்தைக்கு, நாட்டின் பெருமைமிக்க ‘மிராஜ்’ என்ற போர் விமானத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.