இளைஞன் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தைத் தாறுமாறாகக் கீறி உயிரை மாய்க்க முயற்ச்சித்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனே இந்த காரியத்தை செய்துள்ளார்.
காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீடொன்றுக்குத் தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனே உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
கழுத்தில் 4-5 வெட்டுக் காயங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.