Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

வடகொரியா கடும் எச்சரிக்கை மோசமான விளைவுகள் ஏற்படும்.

அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்து இருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது, ‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்கடந்த வாரம் அமெரிக்க பாராளு மன்றத்தில் அதிபர் ஜோ பைடன் தனது முதல் பேச்சை நிகழ்த்தினார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அணுஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வட கொரியா தரப்பில் கூறியதாவது:-

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராளு மன்றத்தில் பேசும்போது, வடகொரியா அவர்களது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத் தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை செய்து இருக்கிறார்.

WILMINGTON, DELAWARE – NOVEMBER 06: Democratic presidential nominee Joe Biden addresses the nation at the Chase Center November 06, 2020 in Wilmington, Delaware. The winner of the 2020 presidential election has yet to be declared, as vote counting continues in the key states of Pennsylvania, Georgia, Nevada, Arizona, and North Carolina. (Photo by Drew Angerer/Getty Images)

விரோத கொள்கையை நிலைநிறுத்துவதற்கான தனது நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியன் மூலம் அமெரிக்கா மிகவும் மோச மான சூழ்நிலையை எதிர் கொள்ளும் என்று தெரிவித் துள்ளது.

இது குறித்து வடகொரியா வெளியுறவுத்துறை அதிகாரி குவான்ஜாங்கன் கூறும்போது, அரை நூற் றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா செய்ததை போல் வடகொரியா மீதான விரோத கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான ஜோபைடனின் பேச்சு தெளி வாக பிரதிபலிக்கிறது.

அமெரிக்க நாட்டின் அதிபர் ஒரு பெரிய தவறை செய்தார் என்பது உறுதி யாகி இருக்கிறது. தற்போது வட கொரியா மீதான அமெ ரிக்காவின் கொள்கையின் முக்கிய குறிப்பு தெளிவாகி விட்டதால் அதற்கான நட வடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம்.

காலப்போக்கில் அமெ ரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும் என்றார்.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment