Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

அவசர நிலை பிரகடனம் கனேடிய மாகாணம் முழுமைக்கும் : காட்டுத்தீ பாதிப்பின் பிரதிபலிப்பு

கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து, மாகாணம் முழுமைக்கும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை வெளியேற்றப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் எப்போது வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலைமையும் உருவாகியுள்ளது.

தொடர்ந்து உள்ளூர் அலுவலர்கள் அவசர நிலை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு பெருமளவில் மக்களை விரைவாக வெளியேற்றுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், தேவையானால், அவர்களுக்கு தங்கும் இடம் முதலான ஏற்பாடுகளை அரசு செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் Mike Farnworth தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுவதும் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் பல இடங்களில் வாழும் மக்களுக்கு வெளியேற ஆயத்தமாக இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில், அவசர நிலை 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்றும், தேவையானால் அது நீட்டிக்கப்படக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment