Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை அரசாங்கம் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அறிவிப்பு

எஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவினை முதல் அளவை செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்திக் கொள்ள முடியும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பின் தொழிநுட்பக்குழு சமர்ப்பித்த கண்டறிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது.

உலக சுகாதார மையம், தமது கண்டறிதலில், ஆறு மாதங்களில் கூட எ எஸ்ட்ராசெனெகா இரண்டாவது அளவைப் பெற முடியும் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் அதுவரை காலப்பகுதிக்கு எஸ்ட்ராசெனெகாவின் முதல் அளவு நோய் எதிர்ப்பு திறனைக் கொண்டிருப்பதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

இலங்கை ஆரம்பத்தில் 500,000 குப்பிகள் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்தியாவில் இருந்து இலவசமாகப் பெற்றது, மேலும் 500,000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்தது.

இரண்டாவது அளவாக பயன்படுத்த எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் சுமார் 350,000 அளவுகளை அரசாங்கம் வைத்திருந்தது.

அதில் ஒரு பகுதியை முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் இரண்டாவது அளவை வழங்க பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும் எனினும் ஏற்கனவே முதலாவது அளவு கிடைத்தவர்களுக்கு இரண்டாவது அளவை செலுத்த இன்னும் 6 இலட்சம் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment