Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

வெப்பமண்டல புயலால் அதிகரித்த கனமழை, சமீபத்திய நாட்களில் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளை மூழ்கடித்து, ஆயிரக்கணக்கான மக்களை முகாம்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், குடியிருப்பும் உற்றார் உறவினர்களை இழந்து தவிக்கும் மோசமான நிலைக்கும் உள்ளாகினர்.

இலங்கையில் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இறப்பு எண்ணிக்கை 334 என அதிகரித்துள்ளதாக ஞாயிறன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் காணாமல் போனவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவுகரமான சுனாமிக்குப் பிறகு இலங்கையைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவு இதுவென்றே கூறுகின்றனர்.

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேச ஆதரவுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாக உறுதியளித்தார்.

இதனிடையே, இந்தோனேசியாவில், சுமத்ரா தீவின் கடுமையாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளை அடைய அதிகாரிகள் திணறிவரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை ​​442 கடந்துள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

அத்துடன் 402 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமத்ரா தீவின் குறைந்தது இரண்டு பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை வரை நெருங்க முடியவில்லை என்றும், உதவிகளை வழங்க ஜகார்த்தாவிலிருந்து இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வானிலை மற்றும் கனரக உபகரணங்கள் இல்லாததும் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக அமைந்தது. தாய்லாந்தில், ஒரு தசாப்தத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் குறைந்தது 162 பேர் மரணமடைந்துள்ளனர், அதிகாரிகள் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதுடன், பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும் அகற்றி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தலைநகரில், சக்திவாய்ந்த சூறாவளியை அடுத்து மண்சரிவுகள் ஏற்பட்டதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 148,000 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment