உலகம் செய்திகள் புதிய செய்திகள்

மன்னிப்பு கேட்க கால எல்லை இல்லை 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட – பிரிட்டன் பிரதமர்

லண்டன்: ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது.

ஜாலியன் வாலாபாக் சம்பவம்:
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், அன்றைய காலகட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் இரு தேசிய தலைவர்கள் சத்ய பால் மற்றும் சைபுதின் கிட்ச்லு கைது செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாலியன் வாலாபாக் 6 முதல் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பூங்காவாக இருந்தது. சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்ட இதற்கு 5 குறுகிய நுழைவாயில்கள் மட்டுமே இருந்தது.

அன்றைய தினம் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரி டயர் கூட்டங்களுக்கு தடை விதித்திருந்தார். தடையை மீறி ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் உதவியுடன் அங்கு சென்ற டயர் வாயில் கதவுகளை அனைத்தையும் மூடி விட்டு மக்களை சுட்டுத் தள்ள உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஈவு இரக்கமில்லாமல் மக்களை சுட்டுத் தள்ளினர். இச்சம்பவத்தில், அப்பாவி பொதுமக்கள் 376 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,100 பேர் காயம் அடைந்தனர். சுதந்திரபோராட்ட வரலாற்றில் மாறாத வடுவாக இச்சம்பவம் அமைந்தது. இச்சம்பவத்தின் நூற்றாண்டு விழா, ஏப்., 13ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

இந்தியா கோரிக்கை:
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இச்சம்பவத்திற்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்:
இந்திலையில், 1919 ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்கு 100 ஆண்டுகள் கழித்து லண்டனின் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் பேசிய பிரதம் தெரசா மே மன்னிப்பு கோரி தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். ஜாலியன் வாலாபாக் சம்பவம் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய ஆறாத சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment