உலகம் செய்திகள் புதிய செய்திகள்

மன்னிப்பு கேட்க கால எல்லை இல்லை 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட – பிரிட்டன் பிரதமர்

லண்டன்: ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது.

ஜாலியன் வாலாபாக் சம்பவம்:
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், அன்றைய காலகட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் இரு தேசிய தலைவர்கள் சத்ய பால் மற்றும் சைபுதின் கிட்ச்லு கைது செய்யப்பட்டதை கண்டித்து மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாலியன் வாலாபாக் 6 முதல் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பூங்காவாக இருந்தது. சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்ட இதற்கு 5 குறுகிய நுழைவாயில்கள் மட்டுமே இருந்தது.

அன்றைய தினம் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரி டயர் கூட்டங்களுக்கு தடை விதித்திருந்தார். தடையை மீறி ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் உதவியுடன் அங்கு சென்ற டயர் வாயில் கதவுகளை அனைத்தையும் மூடி விட்டு மக்களை சுட்டுத் தள்ள உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஈவு இரக்கமில்லாமல் மக்களை சுட்டுத் தள்ளினர். இச்சம்பவத்தில், அப்பாவி பொதுமக்கள் 376 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,100 பேர் காயம் அடைந்தனர். சுதந்திரபோராட்ட வரலாற்றில் மாறாத வடுவாக இச்சம்பவம் அமைந்தது. இச்சம்பவத்தின் நூற்றாண்டு விழா, ஏப்., 13ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

இந்தியா கோரிக்கை:
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இச்சம்பவத்திற்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்:
இந்திலையில், 1919 ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்கு 100 ஆண்டுகள் கழித்து லண்டனின் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் பேசிய பிரதம் தெரசா மே மன்னிப்பு கோரி தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். ஜாலியன் வாலாபாக் சம்பவம் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய ஆறாத சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார்.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment