இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மறைந்த பாஜ அமைச்சர் அனந்த குமார் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு மறுப்பு….

கர்நாடக மாநில பாஜ கட்சியில் தூணாக இருந்து கட்சியை தென்மாநிலங்களில் வளர்த்து பலப்படுத்தியவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார். பெங்களூரு தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 5 முறை இந்த தொகுதியின் எம்பியாக இருந்துள்ளார்.

கடந்தாண்டு உடல்நலக்குறைவால் அனந்த குமார் இறந்த நிலையில், அவரது மனைவி தேஜஸ்வினிக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக வருகிற மக்களவைத் தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி விருப்பம் தெரிவித்தார்.

கர்நாடக பாஜ தலைவர் எடியூரப்பா, தேஜஸ்வினிக்கு சாதகமான பதிலை அளித்ததால் கடந்த இரு மாதங்களாக தேர்தல் பணிகளை தேஜஸ்வினி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பாஜ மேலிடம் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை 3 கட்டங்களாக வெளியிட்டது.

அதில் பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

கடைசியாக வௌியிட்ட பட்டியலில், பெங்களூரு தெற்கு தொகுதியில், 28 வயதான வழக்கறிஞர் தேஜஸ்வி யாதவ் என்பவருக்கு சீட் ஒதுக்கி பாஜ தலைமை அறிவித்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த தேஜஸ்வினி, கட்சி தலைமை தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அனந்த்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எடியூரப்பா, தேஜஸ்வினியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தினார்.

இதுகுறித்து தேஜஸ்வினி கூறுகையில், ‘தேஜஸ்வியை வேட்பாளராக அறிவித்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் எனது பக்குவத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

எனது கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன். எனது கணவர் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்தார்.

நாடு அவருக்கு முதலாவதாகவும், கட்சி அவருக்கு இரண்டாவதாகவும் இருந்தது. அவர் சுயநலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.இப்போது கட்சிக்காக உழைக்க வேண்டியுள்ளது’ என்றார்.

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment