இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

மறைந்த பாஜ அமைச்சர் அனந்த குமார் மனைவிக்கு தேர்தலில் வாய்ப்பு மறுப்பு….

கர்நாடக மாநில பாஜ கட்சியில் தூணாக இருந்து கட்சியை தென்மாநிலங்களில் வளர்த்து பலப்படுத்தியவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார். பெங்களூரு தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 5 முறை இந்த தொகுதியின் எம்பியாக இருந்துள்ளார்.

கடந்தாண்டு உடல்நலக்குறைவால் அனந்த குமார் இறந்த நிலையில், அவரது மனைவி தேஜஸ்வினிக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக வருகிற மக்களவைத் தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினி விருப்பம் தெரிவித்தார்.

கர்நாடக பாஜ தலைவர் எடியூரப்பா, தேஜஸ்வினிக்கு சாதகமான பதிலை அளித்ததால் கடந்த இரு மாதங்களாக தேர்தல் பணிகளை தேஜஸ்வினி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பாஜ மேலிடம் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை 3 கட்டங்களாக வெளியிட்டது.

அதில் பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

கடைசியாக வௌியிட்ட பட்டியலில், பெங்களூரு தெற்கு தொகுதியில், 28 வயதான வழக்கறிஞர் தேஜஸ்வி யாதவ் என்பவருக்கு சீட் ஒதுக்கி பாஜ தலைமை அறிவித்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த தேஜஸ்வினி, கட்சி தலைமை தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அனந்த்குமாரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் எடியூரப்பா, தேஜஸ்வினியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தினார்.

இதுகுறித்து தேஜஸ்வினி கூறுகையில், ‘தேஜஸ்வியை வேட்பாளராக அறிவித்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் எனது பக்குவத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

எனது கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன். எனது கணவர் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்தார்.

நாடு அவருக்கு முதலாவதாகவும், கட்சி அவருக்கு இரண்டாவதாகவும் இருந்தது. அவர் சுயநலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.இப்போது கட்சிக்காக உழைக்க வேண்டியுள்ளது’ என்றார்.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment