இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

அதிசய ஆயுர்வேத கோவிட் மருந்து? குவியும் ஆந்திர மக்கள்.. முதல்வர் ஜெகன் விசாரணைக்கு உத்தரவு

ஆந்திராவின் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐசிஎம்ஆர் குழுவிற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா என்பவரது குடும்பம் கொரோனாவிற்கு இலவசமாக ஆயுர்வேத மருந்து கடந்த சில வாரங்களாக கொடுத்து வருகிறது, இந்த மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை அந்த பகுத உள்ளூர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பலர் உடனே நல்ல பலன் கிடைப்பதாக சொல்ல, மெல்ல மெல்ல அவரது புகழ் பரவ தொடங்கியது. குறுகிய நாட்களிலேயே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் நெல்லூருக்கு படை எடுத்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்திற்கு இலவச மருந்தினை வாங்க குவிந்தனர். கிட்டத்தட்ட ஒரே நாளில் 50 ஆயிரம் பேரை குவியத்தொடங்கினர்.

நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெற்று செல்கிறார்கள். பலர் சமூக இடைவெளியை மறந்து எப்படியாவது அந்த இலவச மருந்தை வாங்கிவிட வேண்டும் என்று தவம் கிடக்கிறார்கள். அந்த மருந்தில் அப்படி என்ன இருக்கிறது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் குழுவினரும் நேரில் சென்று விசாரித்தனர்

முக்கியமான அவர் கண்ணிற்கு சொட்டு மருந்து கொடுத்த உடன் ஆக்சிஜன் லெவல் உடனடியாக அதிகரிப்பதாக மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இநத் மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால் கண் பார்வை பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுவரை மருந்து குறித்து எவரும் புகார் தெரிவிக்கவில்லை. எனினும் அவர் கொடுக்கும் மருந்துகளை மருத்துவ பரிசோதனைகளுக்காக ஆய்வத்திற்கு அனுப்பி உள்ளனர். ஆய்கத்தின் முடிவு வந்த உடன் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே அரசின் அனுமதி பெறாமல் மருந்து விநியோகிக்க கூடாது என்று ஆய்வுக் குழு ஆனந்தையா குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர் எனினும் மருந்து விநியோகம் நடந்த வருகிறது. மிகப்பெரிய கூட்டம் கூடிவருவதால் 3வது அலை பரவும் அபாயமும் எழுந்துள்ளது. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆயுர்வேத மருந்து குறித்து ஐசிஎம்ஆர் குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

Leave a Comment