உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அதிரடி நடவடிக்கை எடுத்த பிரித்தானியா- பெலாரஸ் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்…

Ryanair விமானத்தை போர் விமானத்தை பயன்படுத்தி கட்டாயமாக தரையிறக்கிய சம்பவத்தையடுத்து, பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு பிரித்தானிய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

“பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய” இந்த நடவடிக்கை அவசியம் என பிரித்தானியாவின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில், விமானத்தை இடைமறிப்பது “சிவில் விமான போக்குவரத்து மீதான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்” என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

ஊடகவிலாளரும், அரசுக்கு எதிரான விமர்சகருமான Roman Protasevichஐ தேடப்படும் நபராக பெலாரஸ் அறிவித்ததுடன், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், போலந்து நாட்டில் இருந்த Roman Protasevich விமானம் மூலம் லிதுவேனியாவிற்கு பயணித்த போது, இதனை அறிந்த பெலாரஸ் FR4978- விமானத்தை போர் விமானம் ஒன்றை பயன்படுத்தி வழிமறித்தது.

அத்துடன், குறித்த விமானம் மின்ஸ்க் நகரில் தரையிறக்கப்பட்டு Roman Protasevich கைது செய்யப்பட்டார். பெலாரஸின் இந்த நடவடிக்கை உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

இந்நிலையிலேயே, பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு பிரித்தானிய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பிரித்தானியாவின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

‘‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானங்கள் பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டும்’’ என கிராண்ட் ஷாப்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ‘‘பயணிகள் விமானத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பெலாரஸ் அரசுக்கு எதிராக மேலும் தடைகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.”

“பிரித்தானியாவிற்கான பெலாரஸ் தூதருக்கு இதுகுறித்து மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விமானம் மின்ஸ்க் திருப்பி விடப்பட்டது. ஜனாதிபதி லூகாஷென்கோ தனிப்பட்ட முறையில் MiG-29 போர் விமானத்தை பாதுகாப்பிற்காக அனுப்பி உத்தரவிட்டார் என பெலாரஸ் ஊடகங்கள்” தெரிவத்துள்ளன.   

Recent posts

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. இரா. சம்பந்தன்...
Thamil Paarvai

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

Leave a Comment