உலகம் செய்திகள் புதிய செய்திகள்

அதிரடி நடவடிக்கை எடுத்த பிரித்தானியா- பெலாரஸ் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம்…

Ryanair விமானத்தை போர் விமானத்தை பயன்படுத்தி கட்டாயமாக தரையிறக்கிய சம்பவத்தையடுத்து, பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு பிரித்தானிய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

“பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய” இந்த நடவடிக்கை அவசியம் என பிரித்தானியாவின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில், விமானத்தை இடைமறிப்பது “சிவில் விமான போக்குவரத்து மீதான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்” என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

ஊடகவிலாளரும், அரசுக்கு எதிரான விமர்சகருமான Roman Protasevichஐ தேடப்படும் நபராக பெலாரஸ் அறிவித்ததுடன், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், போலந்து நாட்டில் இருந்த Roman Protasevich விமானம் மூலம் லிதுவேனியாவிற்கு பயணித்த போது, இதனை அறிந்த பெலாரஸ் FR4978- விமானத்தை போர் விமானம் ஒன்றை பயன்படுத்தி வழிமறித்தது.

அத்துடன், குறித்த விமானம் மின்ஸ்க் நகரில் தரையிறக்கப்பட்டு Roman Protasevich கைது செய்யப்பட்டார். பெலாரஸின் இந்த நடவடிக்கை உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

இந்நிலையிலேயே, பெலாரஸ் வான்வெளியைத் தவிர்க்குமாறு பிரித்தானிய அரசு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பிரித்தானியாவின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

‘‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானங்கள் பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டும்’’ என கிராண்ட் ஷாப்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ‘‘பயணிகள் விமானத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பெலாரஸ் அரசுக்கு எதிராக மேலும் தடைகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.”

“பிரித்தானியாவிற்கான பெலாரஸ் தூதருக்கு இதுகுறித்து மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விமானம் மின்ஸ்க் திருப்பி விடப்பட்டது. ஜனாதிபதி லூகாஷென்கோ தனிப்பட்ட முறையில் MiG-29 போர் விமானத்தை பாதுகாப்பிற்காக அனுப்பி உத்தரவிட்டார் என பெலாரஸ் ஊடகங்கள்” தெரிவத்துள்ளன.   

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment