Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபருடன் தொலைபேசியில் பேச்சு .

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை, தொழில்நுட்பங்களை திருடுவதுடன், நியாயமற்ற பொருளாதார நடைமுறைகளில் ஈடுபடுவதாக சீனா மீது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். இந்த விவகாரத்தில் இரு தரப்பு மோதல்கள் வலுத்து, வர்த்தகப்போர் தொடங்கியது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை விதிக்கின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய தகவல்களை சீனா ஆரம்பத்தில் மறைத்து விட்டது, அதனால் அமெரிக்கா பெரும்பாதிப்புக்குள்ளானது என்று டிரம்ப் கருதினார்.

அதைத்தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு மோசம் அடைந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார். இது அமெரிக்க- சீன உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியது.

இந்த தருணத்தில், ஜோ பைடன், அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங்கை நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்து பேசினார். சீனாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திர புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜின் பிங்குக்கும், சீன மக்களுக்கும் ஜோபைடன் முதலில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

சீனாவின் நியாயமற்ற பொருளாதார செயல்பாடுகள், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து, ஜனநாயக ஆர்வலர்களை ஒடுக்கும் சீனாவின் நடவடிக்கைகள், சின்ஜியாங்கில் உய்குர் இன மக்கள் மீது சீனா கட்டவிழ்த்து விடும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் சீன அதிபர் ஜின்பிங்கிடம் ஜோ பைடன் தனது கவலையை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராடுவது, உலகளாவிய சுகாதார நெருக்கடிகளால் எழுந்துள்ள சவால்கள், பருவநிலை மாற்றம், ஆயுத பெருக்கத்தை தடுத்தல் உள்ளிட்டவை பற்றியும் ஜோ பைடனும், ஜின்பிங்கும் விவாதித்து உள்ளனர்.

மோசமான உறவால் இரு தரப்புக்கும் பேரழிவு ஏற்படும் என்று ஜோ பைடனிடம் ஜின்பிங் எச்சரித்தார் என்று சீன அரசு டெலிவிஷன் கூறியது. இரு தரப்பு உறவுகள், முக்கிய சர்வதேச விவகாரங்கள், பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஜின்பிங்கும், ஜோ பைடனும் விவாதித்தனர் என்று சீன டெலிவிஷன் தெரிவித்தது.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஜோ பைடன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், அமெரிக்க மக்களுக்கு பலன் அளிக்கும்போது சீனாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம் தெரிவித்தேன் என கூறி உள்ளார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை இவ்விரு தலைவர்கள் சந்திப்பு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “சீனாவின் கட்டாயமான, நியாயம் இல்லாத பொருளாதார நடைமுறைகள், ஹாங்காங் ஒடுக்குமுறை, சின்ஜியாங்கில் மனித உரிமைகள் மீறல் போன்றவற்றை ஜனாதிபதி ஜோ பைடன், ஜின்பிங்கிடம் வலியுறுத்தி பேசினார்” என கூறப்பட்டுள்ளது.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment