இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் நாடு திரும்பியவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நாடு திரும்பிய மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

கொவிட் – 19 காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக ஒரு  தொகுதி பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல்1124 விமானம் மூலம் சுமார் 283 பயணிகள் நேற்று (31.12.2020) கட்டுநாயக்கா விமான நிலையத்;தை வந்தடைந்த நிலையிலேயே அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தேவைகளின் நிமித்தம் குறுகிய கால பயண ஏற்பாடுகளுடன் இந்தியாவிற்கு சென்ற சுமார் 1500 இற்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் கொவிட் – 19 பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருந்தனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை நாடிய நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஸ் குணவர்த்ன மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இலங்ககைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் மற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதன் பலனாக இன்றைய தினம் முதலாவது தொகுதி பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தேவையான சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவிதமான நோய் தொற்றுக்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அழைத்து வரப்பட்டுள்ள குறித்த பயணிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பயணிகள் அனைவரும் பியகம, கல்பந்த மந்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் நாட்டிற்கு திரும்புவதற்காக காத்திருக்கும் ஏனையவர்களையும் விரைவில் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய குறித்த பயண ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சரின் விசேட பிரதிநிதி திருமதி. சோபிதா ராஜசூரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment