Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தில்

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவிக்கும் யோசனை நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், எதிராக 15 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

40 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டனர். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தச் செய்யாமை மற்றும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி, சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான அணிகளை அடக்குதல், இந்த சட்டத்தை பயன்படுத்தி, சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், தொழில்சார் நிபுணர்கள், எழுத்தாளர்களை பொலிஸில் தடுத்து வைப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான கடந்த காலங்களில் சர்வதேசத்தில் தொடர்ந்தும் பேசப்பட்டு வந்தது.

ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மீண்டும் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்திருந்தது.

மனித உரிமைகளை பாதுகாப்பதாகவும் போர் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகளை நடத்துவதாகவும் அன்றைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டது.

வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டதன் பிரதிபலனாக இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் யூரோக்களாக அதிகரித்தது.

எனினும் தற்பொது ஏற்பட்டுள்ள நிலைமையில், ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை கிடைக்காமல் போனால், இலங்கையின் ஆடை உற்பத்தி தொழில் உட்பட பல தொழிற்துறைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment