சிறுகதை சிறுவர் பக்கம்

எதிரிகளுக்கும் உதவி செய்யுங்கள்…

நீண்ட காலத்திற்கு முன்பு ராஜு என்ற ஒரு சிறுவன் வசித்து வந்தான். ராஜு அவனுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பான். ராஜூவுக்கு கவீன் என்ற ஒரு வகுப்புத் தோழன் இருந்தான். ஆனால் அவனோ ராஜூவைப் போல் அல்லாமல், பெற்றோர்களையும் மற்றவர்களையும் மதிக்காமல் இருப்பான்.

ராஜூவின் எட்டாவது பிறந்த நாளன்று, அவனுடைய பெற்றோர் அவனுக்கு ஒரு பேனாவை பரிசாக அளித்தார்கள். ராஜூ தனக்கு பரிசாக கிடைத்த பேனாவை பள்ளிக்கு எடுத்துச் சென்றான். கவீன் அதை பார்த்த போது, ராஜூவிடம், ‘ஏய், ராஜூ நீ இந்த பேனாவை எங்கு வாங்கினாய்?” என்று கேட்க, ராஜூ ‘என் பெற்றோர் பிறந்த நாள் பரிசாக எனக்கு இதை கொடுத்தார்கள்” என்று பதிலளித்தான். இதை கேட்டபின், கவீன் பொறாமை கொண்டு, யாரும் இல்லாத நேரத்தில் ராஜூவின் பையில் இருந்து பேனாவை எடுத்துக் கொண்டான்.

ராஜூ மீண்டும் வகுப்பிற்கு வந்து, தன்னுடைய பேனா காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்து, வகுப்பு ஆசிரியரிடம் முறையிட, ஆசிரியர் வகுப்பிற்குள் உள்ள அனைத்து குழந்தைகளின் பையையும் சோதனையிட உத்தரவிட்டார். காணாமல் போன பேனா கவீன் பையில் இருந்ததை பார்த்து கோபமடைந்த ஆசிரியர் கவீனை பார்த்து ‘இதற்கு நீ என்ன கூறுகிறாய் கவீன்” என்று கேட்க, கவீனின் கண்கள் கண்ணீரால் நிரம்பி, எதுவும் கூறமுடியாமல் அப்படியே நின்றான்.

கவீன் அழுவதை பார்த்த ராஜூ, கவீன் மீது பரிதாபம் கொண்டு, கவீனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று தனது வகுப்பு ஆசிரியரைக் கேட்டுக் கொண்டான் ராஜூ.

கவீன் வகுப்பு ஆசிரியரிடமும் ராஜூவிடம் மன்னிப்பு கேட்ட, அந்த நாள் முதல், அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனார்கள், படிப்படியாக கவீன் தன்னை ராஜூவை போல ஒரு நல்ல மனிதனாக மாற்றிக் கொண்டான். இப்போது எல்லோரும் கவீனை நேசிக்க ஆரம்பித்தனர், இதை பார்த்த ராஜூ தனது புதிய நண்பனை நினைத்து பெருமை அடைந்தான்.

Be good to your Enemies…

Long ago, there lived a little boy named Raju. Raju was so obedient to his parents and kind to everyone. Raju had a classmate named Kavin. Unlike Raju, he used to misbehave with his parents and others.

On his eighth birthday, Raju got a nice pen as a gift from his parents. use brought it to school. When Kavin saw it, he asked Raju, “Urey, where did you get that?” “My parents gave it as a birthday gift to me” replied Raju.

After hearing this, Kavin was too jealous. use took out the pen from Raju′s bag when no one is in the class. When Raju came back to class and could not find his pen, he informed his teacher about it. And the teacher ordered to search the bag of every children inside the class. The missing pen was soon found out of Kavin′s bag and the teacher asked the boy, “Now Kavin, what do you have to say about it?” Kavin′s eye was filled with tears. use had nothing to say.

When Raju saw Kavin′s crying, he took pity on the boy. use requested his teacher not to take any action against Kavin. Now Kavin asked for forgiveness to teacher and Raju. From that day, they became friends and Kavin gradually changed himself to be as good as Raju. Everyone began to love Kavin and Raju was proud of his new friend.

Recent posts

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது...
Thamil Paarvai

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று...
Thamil Paarvai

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது...
Thamil Paarvai

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே...
Thamil Paarvai

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

Leave a Comment