அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு தொடர்பான ராபர்ட் முல்லரின் அறிக்கை குறித்து அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டோனால்ட் டிரம்ப்பின் பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த எந்த ஒரு நபரும் ரஷ்யாவின் சதித்திட்டத்தில் உடந்தையாக இருக்கவில்லை என்று ராபர்ட் முல்லர் தமது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பர் அமெரிக்க காங்கிரஸ் சபையிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டனை தோல்வியுறச் செய்ய ரஷ்யா குறுக்கிட்டு வதந்திகளைப் பரப்பியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடத்த ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு நியமனம் செய்யப்பட்டது. இக்குழு 22 மாதம் விசாரணை நடத்தி சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதிக்குழு முன்பு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகைக்கு அறிக்கையின் விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் டிரம்ப் அரசு அறிவித்தது. தற்போது அந்த அறிக்கையில் டிரம்ப் அல்லது அவருடைய கட்சியின் ஒரு நபர் மீது கூட ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்படவில்லை என்று அட்டர்னி ஜெனரல் வில்லியம் பர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இவ்வாறு அமைப்பதற்கு அதிபர் டிரம்ப்பின் அழுத்தம் ராபர்ட் முல்லரின் விசாரணைக் குழுவின் மீது இருந்ததா என்றும் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க அதிபர் டிரம்ப்போ தம்மீதான எந்த ஒரு விமர்சனத்திற்கும் ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கும் பதில் அளிக்கவில்லை. அவர் புளோரிடாவில் உள்ள சொகுசு கடற்கரையில் தமது விடுமுறையைக் கழித்து வந்தார். இன்று அதிகாலை அவர் தனிவிமானம் மூலம் வாஷிங்டன் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப். ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை என்று கூறினார்.
Recent posts
10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்
பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி
இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, வின்ஹெடோ...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
இலங்கைக்கு 3 வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...