அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு தொடர்பான ராபர்ட் முல்லரின் அறிக்கை குறித்து அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டோனால்ட் டிரம்ப்பின் பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த எந்த ஒரு நபரும் ரஷ்யாவின் சதித்திட்டத்தில் உடந்தையாக இருக்கவில்லை என்று ராபர்ட் முல்லர் தமது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பர் அமெரிக்க காங்கிரஸ் சபையிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டனை தோல்வியுறச் செய்ய ரஷ்யா குறுக்கிட்டு வதந்திகளைப் பரப்பியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடத்த ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு நியமனம் செய்யப்பட்டது. இக்குழு 22 மாதம் விசாரணை நடத்தி சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதிக்குழு முன்பு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகைக்கு அறிக்கையின் விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் டிரம்ப் அரசு அறிவித்தது. தற்போது அந்த அறிக்கையில் டிரம்ப் அல்லது அவருடைய கட்சியின் ஒரு நபர் மீது கூட ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்படவில்லை என்று அட்டர்னி ஜெனரல் வில்லியம் பர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இவ்வாறு அமைப்பதற்கு அதிபர் டிரம்ப்பின் அழுத்தம் ராபர்ட் முல்லரின் விசாரணைக் குழுவின் மீது இருந்ததா என்றும் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க அதிபர் டிரம்ப்போ தம்மீதான எந்த ஒரு விமர்சனத்திற்கும் ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கும் பதில் அளிக்கவில்லை. அவர் புளோரிடாவில் உள்ள சொகுசு கடற்கரையில் தமது விடுமுறையைக் கழித்து வந்தார். இன்று அதிகாலை அவர் தனிவிமானம் மூலம் வாஷிங்டன் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப். ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை என்று கூறினார்.
Recent posts
பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்
தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்
IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை
ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.
கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது
அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.
கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.
“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...




