ரூ.36 ஆயிரத்தில் தன் மகனின் திருமணத்தை நடத்துகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரது சிக்கனம் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணம்.
ஆந்திரா மாநில ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் தனது மகனுக்கு இன்று (பிப்.10) நடக்க உள்ள திருமணத்திற்கு ரூ. 36 ஆயிரம் மட்டுமே செலவழிக்கிறார்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், விசாகப்பட்டினம் மெட்ரோ பாலிடன் ரீஜினல் டெவலப்மென்ட் அதாரிட்டி (வி.எம்.ஆர்.டி.ஏ)யில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பட்னால பசந்த் குமார். இவருடைய மகனுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்காக மணமகன் மற்றும் மணமகளுக்கான செலவுகள் உறவினர்களுக்கான சாப்பாடு செலவு என மொத்தம் ரூ.36 ஆயிரத்திற்குள் முடிக்க உள்ளார். முன்னதாக கடந்த 2017-ல் பசந்த்குமார் தன்னுடைய மகள் திருமணத்தை ரூ.16 ஆயிரத்திற்குள் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி எளிமையான முறையில் தனது மகன் திருமணத்தை நடத்த உள்ளதை கவர்னர் நரசிம்மன் வாழ்த்தியுள்ளார். லட்சக்கணக்கில் பணத்தை தண்ணீராக செலவு செய்து வி.ஐ.பி.க்களை வரவழைக்கும் இந்த காலத்தில் இவரின் சிக்கன நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எளிமை, சிக்கனம், மகன் திருமணம், உதாரணம்.