Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கத்தோலிக்க பாரம்பரியத்தை தகர்த்த போப் பிரான்சிஸ்.

கத்தோலிக்க பாரம்பரியத்தை தகர்த்தெறிந்து, பெண் ஒருவரை ஆயர்களின் சினோடின் துணை செயலாளராக நியமித்துள்ளார் போப் பிரான்ஸிஸ். இந்த பதவியை வகிக்கும் முதல் பெண் மற்றும் வாக்களிக்கும் உரிமை பெற்ற முதல் பெண்மணியாகவும் அப்பெண் மாறியிருக்கிறார்.

தற்போது கார்டினல் மரியோ கிரேச் தலைமையில், செயல்பட்டு வரும் Synod of Bishops அமைப்பானது 1965 ஆம் ஆண்டில் போப் 6ம் பால்-ஆல் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர நிறுவனமாகும், இது இரண்டாம் வாடிகன் சபையின் ஆயர்களின் விருப்பத்திற்கு இணங்க உருவாக்கப்பட்டது. இது போப்பின் செயல்பாடுகளில் அவருக்கு உதவவும், ஆலோசணைகள் அளிப்பதிலும் உதவுகிறது.

இந்நிலையில் இவ்வமைப்பின் துணை செயலாளர்களாக Nathalie Becquart எனும் பெண்ணையும், Luis Marin என்பவரையும் போப் பிரான்ஸிஸ் நியமித்துள்ளார். இதுவரை பெண்கள் யாரும் இப்பொறுப்பில் நியமிக்கப்படாத நிலையில் வாடிகன் வரலாற்றில் முதல் முறையாக இது அமைந்துள்ளது.

இவ்வமைப்பின் தலைமைக்கு இதுவரை பெண் உறுப்பினர்களே இடம்பெறாத நிலையில் முதல் முறையாக Nathalie Becquart (வயது 52) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக இச்சபையின் பொதுச்செயலாளர் Cardinal Mario Grech கூறுகையில், சமீப காலமாக சபையில் பெண்களின் வருகை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பிரநிதித்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும் Nathalie-க்கு வாக்களிக்கும் உரிமையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சகோதரி நத்தலி பெகார்ட் நியமனம் மற்றும் வாக்களிப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்புடன், ஒரு புதிய கதவு திறக்கப்பட்டுள்ளது என்று Cardinal Mario Grech தெரிவித்தார்.ஆயர்கள் மற்றும் கார்டினல்கள் ஆகியோரால் இந்த Synod of Bishops வழிநடத்தப்படுகிறது, மேலும் வாக்களிக்க முடியாத நிபுணர்களையும் இது உள்ளடக்கியது, இதன் அடுத்த கூட்டம் 2022 இலையுதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளது

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment