சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

காக்கா ஏன் கறுப்பாச்சு

ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சாம். அப்ப எல்லா காக்காவும் ரொம்ப தூரமா சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வராம பெரியவங்களாகி வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அற்புதா.

அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம்.

இரண்டுபேரும் எப்பயும் பேசிட்டே இருபாங்கலாம், ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

சூரியன் கிட்ட வரைக்கும் பறக்கிர காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம், வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசி கிட்ட கொடுக்க சொல்லுச்சாம்.

காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போகும் வழியில் திருமண ஊர்வலம் போயிட்டு இருந்தது. அதில் நிறைய பழங்கள், உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க.

காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசப்பட்டு, பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம்.

மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் பையப் பார்த்து மரத்துல ஏறி பைக்குள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பார்த்து சொக்கி போயிட்டானாம். உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

காக்கா நல்லா சாப்பிட்டு வந்து, பைய எடுத்துகிட்டு இளவரசி கிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி.

இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்புனு சொல்லிட்டு பைய தூக்கிப்போட்டுச்சாம்.

மறுநாள் காலை, சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியன் அந்த பை கீழ கிடந்ததப் பார்த்து ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம். பயங்கர கோபம் வந்துடுச்சாம்

காக்காவை கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனுக்கும் கோபம் வந்து பூமி மேல தூரமா போயிடுச்சாம்.

நீதி : கொடுக்கும் வேலையை சரியாக செய்தல் வேண்டும்.

Recent posts

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 06

1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும். Otters hold hands when sleeping. 2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின்...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 05

1. நெப்டியூன் சூரியக் குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். Neptune is the eighth and farthest known planet from...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 04

1. முதன் முதலில் சர்க்கரையை கரும்பிலிருந்து பிரித்தெடுத்த நாடு இந்தியா. India is the first country to extract sugar from sugarcane. 2. இந்திய...
Thamil Paarvai

கடல் ஆமைகள் பற்றி ஒரு குட்டி கதை..!!

நம்மில் பெரும்பாலானோர் ஆமையை மிருகக்காட்சி சாலையில் அல்லது ஊர்வன பூங்காவில் பார்த்திருப்போம். இருப்பினும், அதன் கடல் இனத்தின் கடல் ஆமையை பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஆச்சரியமல்ல,...
Thamil Paarvai

எப்படி இவரால் மட்டும் சுலபமாக செய்ய முடிகிறது..??

ஒரு நாள், சில இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக காட்டிற்குச் சென்றனர். அவர்கள் சிறிது தூரத்தில் ஒரு சில பானைகளை வைத்து அதை நோக்கி குறி வைத்தனர்....
Thamil Paarvai

கண்ணீர் மெழுகுவர்த்தியை அணைத்து விடுமா..?

ஒரு தந்தையும் அவருடைய ஒரே ஒரு மகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர் தன்னுடைய மகளை மிகவும் நேசித்தார் மற்றும் அவளுக்காக மட்டுமே தனது வாழ்க்கையை வாழ்ந்தார்....
Thamil Paarvai

சுண்டெலியின் பயம்

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன...
Thamil Paarvai

வாய்மையே வெல்லும்

ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள...
Thamil Paarvai

Leave a Comment