ஆரோக்கிய சமையல் ஆரோக்கியம் பொது மருத்துவம்

காளானில் உள்ள மருத்துவப் பயன்கள்.

இன்று பலரும் காளானைப் பயன்படுத்தி பலவகையான சுவையுடைய உணவுகளைத் தயார் செய்கின்றனர். ஆனால், இதைப் பயன்படுத்துவோருக்கு இதன் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிவதில்லை. காளானில் அதிகளவு இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து, காப்பர், வைட்டமின் முஇ ஊஇ னுஇ டீஇ கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது.

👉 காளானில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஆனால், இவை அனைத்துமே சாப்பிடக்கூடியது அல்ல. ஏனெனில் அதில் பலவகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை. இப்போது காளான்களில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கு காண்போம்.

காளானில் உள்ள நன்மைகள் :

👉 காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

👉 காளானில் உள்ள பாலிசாக்கரைடு, பலவகை நோய்களைத் தடுத்து ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் காளானில் உள்ள டுநவெலளiநெஇ நுநசவையனநnin எனும் வேதிப்பொருட்கள், இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இரத்தத்தை சுத்தமாக்கி, இதயத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.

👉 தினந்தோறும் காளான் சு+ப் அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

👉 காளானில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

👉 பட்டாணி, பால், முட்டை, மீன், கோழி போன்ற உணவுப்பொருட்களைக் காட்டிலும் காளானிலேயே அதிகம் புரதச்சத்து உள்ளது. சராசரியாக 100 கிராம் காளானில் 35 சதவீதம் அளவுக்கு புரதச்சத்து உள்ளது.

👉 காளான் சாப்பிடுவதால், ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறு பிரச்சனைகளைத் தடுப்பதுடன், உடலில் ஏற்படும் காயங்களை எளிதில் குணமாக்கலாம்.

👉 நார்ச்சத்து காளானில் அதிகளவு உள்ளது. எனவே காளானை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.

👉 மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றப் பிரச்சனைகளை குணமாக்க காளான், முட்டைகோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து சு+ப் வைத்து சாப்பிடலாம்.

காளான் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது எனத் தெரியுமா ?

👉 கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்கள் காளானை அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

👉 அதேபோல் காளான் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

👉 காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால், பாலு}ட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Recent posts

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்கள்.

அழகிற்காக கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் உடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிய ஆசைப்படுவர். அதற்கு காரணம் கைகளை அழகுபடுத்திக் கொள்ள தான் என்றாலும் உடைக்கு...
Thamil Paarvai

புகைபிடிக்கும் சிகரெட்டுகளின் ஆரோக்கிய விளைவுகள்.

சிகரெட் புகைப்பதால் உடல்நல பாதிப்புகள் இருப்பதை எல்லோருக்கும் தெரியும். புகைபிடித்தல் மூக்குக்கு வெறுக்கத்தக்கது, மூளைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நுரையீரலுக்கு ஆபத்தானது. புகைபிடித்தல் என்பது உங்களுக்கு ஏற்படக்கூடிய...
Thamil Paarvai

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

Leave a Comment