கடந்தாண்டு அதிக படங்களில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தாண்டு படங்களில் நடிக்க நிதானத்தை கடைபிடித்து வருகிறார். தற்போது, மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் நரேந்திரா இயக்கத்தில் கதையின் நாயகியாக அவர் நடிக்கும் 20வது படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. மகாநடியைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்குகிறது. மேலும், இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் தான் நடைபெறுகிறது. அதனால் மே மாதம் அமெரிக்கா பறக்கிறார் கீர்த்தி சுரேஷ். அங்கு இரண்டு மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.