இலங்கை உட்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு பஹ்ரெய்ன் தடை விதித்துள்ளது.
கோவிட் பரவலில் சிவப்பு பட்டியலில் உள்ளடங்கிய நாடுகள் என்ற வகையில் இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் விமானங்கள் இன்று முதல் தடை செய்யப்படுவதாக பஹ்ரெய்னின் பொது வானூர்தி சேவைப்பிரிவு அறிவித்துள்ளது.
இந்த தடையைப் பொறுத்தவரையில் பஹ்ரெய்ன் வதிவிட வீசாவைக்கொண்டவர்கள் உள்ளடங்கமாட்டார்கள். எனினும் நாட்டுக்குள் நுழையும் போது அவர்கள் 48 மணித்தியாலத்துக்கு மேற்படாத நேரத்தில் எடுக்கப்பட்ட பீ.சீ.ஆர் சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இதனையடுத்து அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பின்னர் பஹ்ரெய்னுக்குள் சென்ற 10 நாளில் மற்றும் ஒரு பீ.சீ.ஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, ஏனைய நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட மற்றும் செலுத்தாதவர்கள் பீ.சீ.ஆர் சோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று பஹ்ரெய்ன் பொது வானூர்தி சேவைப்பிரிவு அறிவித்துள்ளது.