ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள 24 ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் பவுடர் பாட்டில்களை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 2021-ம் ஆண்டு காலாவதியாகும் ஷாம்பு , பவுடர் பாட்டில்கள் சோதனை செய்யப்பட்டன. நடந்து முடிந்த சோதனையின் முடிவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைட் வேதிப் பொருட்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஃபார்மால்டிஹைட் 38 முதல் 45% நீர்த்த கரைசல்லாக ஃபார்மலின் என்ற பெயரில் கிடைக்கிறது. இதில் பார்மிக் அமிலம் மாசுப்பொருளாகக் கலந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. தாவர உறுப்புகளின் உள்ளமைப்பினை அறிந்துகொள்ள நடைமுறையில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நிலைநிறுத்தி இதுதான் என கூறுகின்றனர். மேலும் இது கட்டுமான பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என கூறப்படுகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நோ டியர்ஸ் பேபி ஷாம்புவினை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதிக அளவில் நச்சு வேதிப்பொருளான ஃபார்மால்டிஹைட் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும்இ இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என ஆய்வில் கண்டிறியப்பட்டுள்ளது. ஆனால், அந்நிறுவனம் எவ்வித நச்சும் கலக்கப்படவில்லை என கூறி வருகிறது. இந்த பரிசோதனையில் நச்சின் அளவு குறித்து சொல்ல முடியாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். தரப்பரிசோதனையில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தோல்வியடைந்ததையடுத்து, இதர சோதனைகளுக்காக தற்போது மத்திய மருந்துகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார். இதற்கிடையில் அமெரிக்காவில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் தொடர்ந்து பயன்படுத்தி புற்றுநோயால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக, பல நூறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது பேபி ஷாம்புவிலும் புற்றுநோய் உருவாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பதாக ஆய்வு முடிவு வந்திருப்பது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recent posts
10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்
பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி
இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, வின்ஹெடோ...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
இலங்கைக்கு 3 வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...