Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜெர்சி தீவுக்கு விரையும் பிரான்ஸ் போர்க்கப்பல்கள். அதிகரிக்கும் பதட்டம்.

ஜெர்சி தீவில் மீன்பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தொடர்பான பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு இடையில் உள்ள சேனல் தீவுகளில் ஜெர்சி தீவு மிகப்பெரியது. அங்கு பிரித்தானியா ஆதரவுடன் சுய ஆட்சி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தீவில் மீன்பிடிக்க வரும் பிரான்ஸ் மீனவர்களுக்கு ஜெர்சி அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனங்கள் தெரிவித்தது, அதுமட்டுமின்றி மின்சாரத்தை துண்டிப்போம் என என எச்சரிக்கையும் விடுத்தது.

இதனிடையே, ஜெர்சி தீவின் முதலமைச்சருடன் உரையாடிய பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அவர்களுக்கு உறுதியான ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பதட்டங்களை உடனடியாக குறைக்க வேண்டும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஜெர்சி தீவின் முதல்வர் Senator John Le Fondre-வும் வலியுறுத்தினர் எனவும், மீன்பிடி உரிமம் தொடர்பில் ஜெர்சி மற்றும் பிரான்சுக்கு இடையில் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என பிரித்தானியா பிரதமர் அலுவகத்தின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பிரெக்ஸிட் பிந்தைய மீன்பிடி உரிமைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 60 பிரான்ஸ் மீன்பிடி படகுகள் இன்று காலை ஜெர்சி தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள முக்கிய துரைமுகம் அருகே கூடியுள்ளது.

பிரான்ஸ் மீனவர்களின் போராட்டத்தால் கடல் போக்குவரத்து தடைப்படும் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலைமையை கண்காணிக்க ஜெர்சி தீவு அரசாங்கத்தின அனுமதியுடன் பிரித்தானியா இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் இரண்டு இரண்டு போர்க்கப்பல்களை ஜெர்சி தீவுக்கு அனுப்பியுள்ளது.  பிரித்தானியாவை தொடர்ந்து பிரான்சும்   போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதால் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment