Featured Uncategorized இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை.

அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிறிதரன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவசர அவசரமாக இக்கூட்டம் கட்சி யாப்பு விதிகளுக்கு முரணாகக் கூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழரசுக் கட்சியின் முக்கிய  உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாத  பெரும்பான்மையில்லாத சிறு கூட்டமாக அது நடந்து முடிந்துள்ளது.

கட்சி விதிகளுக்கு முரணாக முடிவுகளை எடுத்ததோடு அதை அவசர அவசரமாக  கட்சியின் பேச்சாளராக இருக்கும் சுமந்திரன் ஊடகங்களுக்கு  பின்வரும் செய்தியை அறிவித்த அவலமும் நடந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசா அவர்களை தமிழரசுக் கட்சி ஆதரிப்பதாகவும்,தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரனை தாம் ஆதரிக்கவில்லை என்றும்,பா. அரியநேத்திரன் ஜனாதிபதி வேட்பாளர் நிலையிலிருந்து விலகவேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும்,  தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்தது.

சுமந்திரனும் சாணக்கியனும் ஆரம்பத்தில் இருந்து எதற்காக   இத்தனை பரபரப்பாகவும் மனதை நிறைத்த பதட்டத்தை காட்டிக் கொள்ளாமலும் ஒரு அக்கப்போரை

ஊர் ஊராக நடத்தி வந்தார்கள் என்பதை தமிழரசுக்கட்சியின் தலைமையும்  தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும், அறிந்து கொண்டனர்.

அதேபோல்  அதன் தொண்டர்களும், ஆதரவாளர்களும் இன்று தெளிவுக்கு வந்துள்ளனர்.

இன்று தமிழ் பொது வேட்பாளருக்கான  ஆதரவு வடக்குக் கிழக்கில் கட்சி வேறுபாடுகளின்றி பெருகிவருவதும்  அதில் தமிழரசுக் கட்சியின், முக்கிய தலைவர்கள்,  உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் கணிசமாக களத்தில் இறங்கி செயற்பட்டு வருவதையும் அனைவரும் அறிவர்.

சுமந்திரன் – சாணக்கியன் போன்றோர் தமிழினத்தின் நன்மைக்காக தமிழரசுக்  கட்சியில் இணைந்து  கொண்டார்கள் என இனிமேலும் தமிழரசுக்கட்சி நம்பினால் தந்தை செல்வா அன்று கூறியதுபோல் கடவுள்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும்,  கட்சியின் களைகளை கண்டறிய தமிழ்ப் பொதுவேட்பாளர்

தமிழரசுக்கட்சிக்கு உதவியிருப்பதாக  மக்கள் பேசிக்கொள்வதையும் பரவலாகக் கேட்க முடிகிறது.

Recent posts

0x1c8c5b6a

0x1c8c5b6a
admin

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment