கொழும்பின் சன நெரிசல் மிக்க பல இடங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் தாம் அதிக வேதனை அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கு முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த விசாரணைகளுக்கு முழு இலங்கையர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுள்ளார்.
அதேபோல் தேவையற்ற வதந்திகளை நம்பாமல், அமைதியை கடைப்பிடிக்குமாறும் ஜனாதிபதி இலங்கை மக்களை கேட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை இனங்காண அரசாங்கம் முழுவீச்சுடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.