கிரிக்கெட் விளையாட்டு

தொடரை முழுமையாக கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்இ தென்னாபிரிக்க அணி 41 ஓட்டங்களால் டக்வெர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின், கேப் டவுனில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற குறித்த போட்டியில், ஏன் இப்படி தாடிய வேளையில் மைதானத்தின் மின்விளக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போட்டியை இடைநிறுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய 5 போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆபிரிக்க அணி 5 – 0 என வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்துஇ 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும், பிரியமல் பெரேரா 33 ஓட்டங்களையும், இசுரு உதான 32 ஓட்டங்களையும், அஞ்சலோ பெரேரா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் கசிசோ ரபடா 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் மற்றும் அன்ரிச் நோர்ட்ச் ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

226 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 28 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், மின் ஒளி விளக்குகளில் ஏற்பட்ட கோளாறினால் இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது, தென்னாபிரிக்க அணி சார்பில் ஏய்டன் மார்க்ரம் ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் ரஸ்ஸி வன் டெர் டஸ்ஸன் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க மற்றும்
திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து, குறித்த கோளாறை சீர்செய்ய முடியாத நிலையில் போட்டி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்போது, டக்வெர்த் – லூயிஸ் முறைக்கு அமைய, தென்னாபிரிக்க அணி 95 ஓட்டங்களை பெற வேண்டியிருந்தது. தென்னாபிரிக்க அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக, தென்னாபிரிக்க அணியின் ஏய்டன் மார்க்ரம் தெரிவானதோடு, தொடரின் சிறப்பாட்டக்காரராக குயின்டன் டி கொக் தெரிவானார்.

அல்லாவின் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

இலங்கை 225/10 (49.3)
குசல் மெண்டிஸ் 56 (84)
பிரியமல் பெரேரா 33 (57)
இசுரு உதான 32 (29)
அஞ்சலோ பெரேரா 31 (37)

கசிசோ ரபடா 3/50
இம்ரான் தாஹிர் 2/33
அன்ரிச் நோர்ட்ச் 2/35

தென்னாபிரிக்கா 135/2 (28.0 வுயசபநவ 95 (D/L)
ஏய்டன் மார்க்ரம் 67ழூ (75)
ரஸ்ஸி வன் டெர் டஸ்ஸன் 28ழூ (37)

லசித் மாலிங்க 1/22 (6.0)
திசர பெரேரா 1/20 (5.0)

ஆட்ட நாயகன்: ஏய்டன் மார்க்ரம்
தொடர் நாயகன்: குயின்டன் டி கொக்

Recent posts

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

Leave a Comment