Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கிராம சேவையாளர் சம்மேளனம்

முன்னுரிமை பட்டியலை மீறும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உறுப்பினர்களின் உறவினர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டமையை கண்டித்து கிராம சேவையாளர் சம்மேளனம் இன்று இரவு முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிக்கார இதனை அறிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கமும் தமது போராட்டத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் மற்றும் இரண்டாவது கோவிட் அலைகளின் போது, கிராம சேவையாளர்கள் இரவும் பகலும் சிறப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது கிராம சேவையாளர் ஒருவரும் கோவிட் தொற்றினால் மரணமானார். மேலும் பல அதிகாரிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே தமது நிலைமையைக் கருத்தில் கொண்டு தமக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தபோதும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை என்று சுமித் கொடிக்கார குறிப்பிட்டார்.

இருப்பினும், பெரும்பாலான அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ,அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனமும் இந்த விடயத்தில் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது.

எனவே, நாடு முழுவதும் மொத்தம் 12,000 கிராம சேவையாளர்கள்; தங்களது அனைத்து கடமைகளிலிருந்தும் விலகியிருக்க முடிவெடுத்துள்ளதாக கிராம சேவையாளர் சம்மேளன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த மோசமான நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recent posts

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. இரா. சம்பந்தன்...
Thamil Paarvai

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

Leave a Comment