நயன்தாரா, இந்தாண்டில் பத்துப் படங்களுக்கும் மேல் நடித்தால், அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. காரணம், அவருக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட படங்களோடு, இன்னொரு படமும் சேர்ந்திருக்கிறது. இதையடுத்து, படு உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா. அர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘ஐரா’ திரைப்படம், வரும் மார்ச் 28ல் வெளியாக உள்ளது.
அதைத் தொடர்ந்து ‘கொலையுதிர் காலம்’, ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’, அட்லி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் படம் என படங்கள் வரிசையாக உள்ளன. தமிழ், மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களில் இருந்தும் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்திலும் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து, கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது வேல்மதி இயக்கத்தில் புதிய படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். வேல்மதி இதற்கு முன் ஸ்ரியா ரெட்டியை கதாநாயகியாகக் கொண்டு ‘அண்டாவ காணோம்’ படத்தை இயக்கியுள்ளார். தற்போது நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ள படத்தை கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரிடம் மேனேஜராக பணியாற்றிய குமார் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இத்தனைப் படங்களிலும் எப்படி நடிப்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார் நயன்தாரா. இருந்தபோதும், வரும் வாய்ப்புகளை தட்டிவிடமும் பெரிதாக யோசிக்கிறார்.